கோவிலம்பாக்கம் (சுண்ணாம்பு கொளத்தூர்) பேரூராட்சிக்குட்பட்ட மேக்ஸ்வொர்த் நகரிலுள்ள முதல் பிரதான சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்ல சிரமமாக இருப்பதோடு, பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத நிலையில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட சாலையாக உள்ளது. சுமார் அரை கி.மீ. தொலைவு உள்ள மேக்ஸ்வொர்த் நகர் முதலாவது பிரதான சாலையை தார்ச்சாலையாகப் போட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முக சுப்பிரமணியன், பள்ளிக்கரணை.