வடசென்னையில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஓராண்டு காலமாக இங்கு வரும் மக்கள், நீண்ட தூரம் நடந்து பேருந்துகளைப் பிடிக்க வேண்டியுள்ளது. மருத்துவமனைக்கு எதிரிலேயே இரண்டு பேருந்து நிறுத்தங்கள் இருந்தும், அவற்றில் பேருந்துகள் நிற்பதில்லை. இந்த நிறுத்தங்களுக்கு அருகிலேயே சிக்னல் உள்ளதால், பேருந்துகள் நின்று தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பேருந்துகளை மேற்கண்ட நிறுத்தங்களில் நிறுத்த நடைமுறை சிக்கல்கள் ஏதுமில்லை. இதுதொடர்பாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.இராமலிங்கம், தண்டையார்பேட்டை.