சென்னை மாநகரப் பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. சில பேருந்துகளில், ஜன்னல், கண்ணாடிகளில்கூட விளம்பரங்கள் காணப்படுகின்றன. இவற்றால், பேருந்தில் பயணிப்பவர்கள் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களைக்கூட தவற விடும் நிலை காணப்படுகிறது. எனவே, பயணிகளுக்கு இடையூறாக உள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ். மைக்கேல் ஜீவநேசன், போரூர்.