திருநீர்மலை பேரூராட்சிக்கு உள்பட்ட நெஞ்சக நோய் மருத்துவமனை அருகில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தெருவில் நடமாடவே முடிவதில்லை. மேலும், இரவு நேரங்களில் இந்த நாய்கள் ஓயாமல் குரைத்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. நாய்களின் கழிவுகளை தினமும் அகற்ற வேண்டியுள்ளது. எனவே, நாய்களைப் பிடித்துச் செல்ல திருநீர்மலை பேரூராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
கே.ஜெயலட்சுமி,
தாம்பரம் சானடோரியம்.