சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பழைய நிழற்குடையை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் இடித்து பல வாரங்களாகியும் இன்னும் புதிய நவீன நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களும், முதியோரும், உட்கார இடமில்லாமல் மழையிலும், வெயிலிலும் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு புதிய நவீன நிழற்குடை அமைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.