சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து கிண்டி செல்லும் மார்க்கத்தில் குரோம்பேட்டை தபால் நிலையம் அருகே பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வீசிய வர்தா புயலின்போது இந்த பேருந்து நிலையம் சிதிலமடைந்து, தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை பிய்ந்துள்ளதால், மழைக் காலத்தில் ஒழுகும் நிலை உள்ளது. மேலும், இங்குள்ள விளக்குகளும் எரிவதில்லை. அப் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளின் கொட்டகையாக மாறிவிட்டது. எனவே, பழுதடைந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையும், பல்லவபுரம் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.சந்தானம், குரோம்பேட்டை.