வடபழனி அஞ்சல் அலுவலகத்தின் எதிர்ப்புறத்தில் ஆர்க்காடு சாலையும், துரைசாமி சாலையும் சந்திக்கும் ஒரு வழிப்பாதை உள்ளது. குறுகிய இப் பாதை சந்திக்கும் இடத்தில் சாலையை ஆக்கிரமித்து ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இச் சந்திப்பின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் சுலபமாகத் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, சாலையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கழிப்பிடத்தை நீக்கி சாலையை அகலப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.பலராமன், கோடம்பாக்கம்.