சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியான முகப்பேர் மேற்கில் தபால் நிலையம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. மேலும், கடிதம் போடுவதற்கு மக்கள் அதிகம் கூடுமிடத்தில் தபால் பெட்டி எதுவும் இல்லை. இதனால், கடிதங்களை அனுப்புவதற்கு வெகு தூரம் அலைய வேண்டியுள்ளது. எனவே, முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலும், நொளம்பூர் 4-ஆவது பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் அருகிலும் தபால் பெட்டிகளை வைக்க, அஞ்சலகத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா முகுந்தன், நொளம்பூர்.