ஆபத்தான மின்கம்பம்

சென்னை அருகே உள்ள ஆவடி பெருநகராட்சி 17-ஆவது வார்டுக்குள்பட்ட மூர்த்தி நகரில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் உள்ளது.

சென்னை அருகே உள்ள ஆவடி பெருநகராட்சி 17-ஆவது வார்டுக்குள்பட்ட மூர்த்தி நகரில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இங்கு தினசரி பூஜைகள் நடப்பதோடு, மார்கழி மாதத்தில் நடைபெறும் ஐயப்ப பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தக் கோயில் எதிரே உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் பிளந்து சாய்ந்து காணப்படுகிறது. பெருமழை, புயல் காலங்களில் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் அபாயம் உண்டு. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ.பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com