சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து அஸ்தினாபுரம் வரை செல்லும் 52பி மாநகரப் பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து செல்லும் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம் பகுதிகளில் ஏராளமான நடுத்தர, ஏழை எளிய மக்கள் வசிக்கின்றனர். மேலும், ஏராளமான சிறுதொழில் நிறுவனங்கள், அரசு வங்கிகள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளன. இப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பிறகே, சென்னையின் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். எனவே, மேற்படி 52பி தடம் எண் பேருந்துகளை அதிகப்படுத்தவும், அந்த வழித்தடத்தில் மினி பேருந்துகள் விடவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு.