சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 10-ஆவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர் 6-ஆவது சந்தில் இருந்த பெயர்ப் பலகை அழிந்தும், சேதமடைந்தும் இருந்தது. இது பற்றிய செய்தி ஆராய்ச்சிமணி பகுதியில் வெளியாகி இருந்தது. தற்போது, அதற்குப் பதிலாக புதிய பெயர்ப் பலகை அமைத்துள்ளார்கள். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.