சென்னை பெரம்பூர் அருகில் உள்ள தாஷாமக்கான், நியூ வேரன்ஸ் சாலைப் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், சாலையோரங்களில் உள்ள நடைமேடைகளில் நடப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளைத் துரத்திச் சென்று நாய்கள் கடிக்கின்றன. இந்த நாய் தொல்லையை ஒழிக்க பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.ராஜலட்சுமி, தாஷாமக்கான்.