தாம்பரம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ரயில்வே மூலம் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் தரமாகவும், விலை மலிவாகவும் உணவுப் பொருள்கள் விற்கப்பட்டு வந்தன. தற்போது உணவகம் எடுக்கப்பட்டு, அந்த இடமும் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால், வெளியூர் பயணிகளும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள உணவகங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இரு உணவகங்கள் அமைக்கப்பட்டு தரமான உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. அதேபோல், தாம்பரம் ரயில் நிலையத்திலும் ஐ.ஆர்.சி.டி.சி. உணவகங்களை அமைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?
சண்முக சுப்பிரமணியன், பள்ளிக்கரணை.