திருவொற்றியூர் தேரடியிலிருந்து மார்க்கெட் வரையும் அதுபோல் ஏகவல்லியம்மன் கோயில் தெருவிலும் உள்ள குடிநீர் இணைப்புப் பெற்ற வீடுகளில் கடந்த பதினைந்து நாட்களுக்கு மேல் குடிநீர் வருவதில்லை. பணியாளர்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து பகுதி பொறியாளரிடம் புகார் அளித்த பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீர் வசதி பெற்ற வீட்டுக் குழாய்களில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சண்முகம், திருவொற்றியூர்.