சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகரில் கடந்த ஓராண்டு காலமாக தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் இரவு நேரங்களில் இருளில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதுபற்றி பல்லவபுரம் நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பி.இரமேஷ், கீழ்கட்டளை.