சென்னை மாநகராட்சி 100-ஆவது வட்டம் என்.எஸ்.கே. நகர் போக்குவரத்து சிக்னல் அருகில் நடைபாதை கற்கள் பெயர்ந்து ஓராண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சாலையோரமாக நடந்து செல்லும் முதியவர்கள் தடுக்கி விழுந்து அடிபடுகின்றனர். இது பற்றி பகுதி செயற்பொறியாளருக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் பலமுறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. பெரிய அளவில் காயங்களோ, விபத்துகளோ ஏற்படுவதற்கு முன்னால் நடைபாதை கற்களைப் புதிதாகப் பதிப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.