ஆவடி பெருநகராட்சி சின்னம்மன் கோயிலில் இருந்து கிழக்கு நோக்கி அம்பத்தூர் டன்லப் வரை செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் பல்வேறு பள்ளிகளும், கல்லூரியும் இருக்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலை மிகவும் சிதிலமடைந்து கருஞ்ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சிதிலமடைந்த இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,.
- எஸ்.பழனி, ஆவடி.