சென்னை வேளச்சேரி விரைவாக முன்னேறி வரும் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் இப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இங்கு மேம்பாலம் கட்டும் பணி விரைவில் நிறைவடைய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான விஜயநகர் பேருந்து நிலையத்தை வேளச்சேரி மாடி ரயில் நிலையம் அருகே மாற்ற வேண்டும். மேலும், வேளச்சேரி ஏரியைத் தூய்மைப்படுத்தி படகுகள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயங்கும் மாடி ரயிலை பரங்கிமலை வரை விரிவுபடுத்தும் பணி ஆண்டுக்கணக்காக நடைபெற்று வருகிறது. அதை விரைவாக முடித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். அரசு நடவடிக்கை எடுக்குமா?
கே.எஸ். கோவர்த்தனன், வேளச்சேரி.