பெருநகர சென்னை மாநகராட்சி 105-ஆவது வட்டம் எம்.எம்.டி.ஏ. காலனி பாண்டியன் தெருவில் உள்ள பூங்கா விளக்குகளும், வாயிலும் இன்றி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார்கள் அளித்தும் பதிலில்லை. அதேபோல், 105-ஆவது வார்டில் உள்ள தெருக்களில் விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. இதுகுறித்து பகுதி மின் வாரிய செயற்பொறியாளரிடம் கேட்டால் பெருநகர மாநகராட்சியில் பல்புகள் கொடுத்தால் போடுகிறோம் என்கின்றனர். ஆனால், பெருநகர மாநகராட்சியில் புகார் அளித்தால் முறையாக பல்புகள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்கின்றனர். பல்புகள் போடாததால் இருட்டில் பெண்களால் நடமாட முடியவில்லை. பெண்களைக் கேலி செய்யும் சம்பவங்களும், நகைகளைப் பறிப்பதும் நிகழ்கின்றன. எனவே, பூங்காவைப் பராமரிக்கவும், தெரு விளக்குகளை எரிய வைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெ. தமிழரசு, அரும்பாக்கம்.