பெரம்பூர் சர்ச் அருகே உள்ள சிறுவள்ளூர் சாலையில் செயின்ட் ஜோசப், ரயில்வே பள்ளிகள் அமைந்துள்ளன. காலை நேரங்களில் அடையார் ஆனந்த பவன் வழியாகவும், ஜவஹர் நகர் பேடன் பவுல் சாலை வழியாகவும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர், வேன், மினி லாரி போன்றவற்றால் தினமும் கடும் போராட்டத்துக்குப் பின்பே சரியான நேரத்திற்குப் பள்ளியில் விட முடிகிறது. எவ்வளவு நேரம் முன்னால் புறப்பட்டாலும் இதே நிலைமை தான். எனவே, இந்தச் சாலைகளில் காலை 7.45 மணி முதல் 8.30 மணி வரை மேற்படி வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்து, நெரிசலைக் குறைக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.