சென்னை பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலைய மேம்பாலத்தில் இரவில் போதிய மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் 4-ஆவது நடைமேடையில் சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து வந்திறங்கும் பயணிகள் வெளியேறும்போது போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் சுரங்க நடைபாதை கட்டுமானங்களில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போதிய விளக்குகளை அமைத்து பயணிகளுக்கு உதவ வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், சென்னை-82.