திருவொற்றியூர் பெரியார் நகர் மாநகராட்சி மண்டலம் 1-ஐ சேர்ந்த பகுதி. இ-சேவை மையம், அம்மா உணவகம் ஆகிய ஒருங்கிணைந்த கட்டடங்களின் அருகே குப்பை வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றம் அவ்வழியாகச் செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது. அதற்கு அருகே நகரின் மிகப்பெரிய தனியார் பள்ளி, கடைகள் உள்ளன. தினமும் இந்த இடத்தைக் கடப்போர் பெரும் தொல்லையைச் சந்தித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குப்பை வண்டிகளை வேறு இடத்தில் நிறுத்த வேண்டும்.
கவியழகன், திருவொற்றியூர்.