சென்னை, மண்ணடி பிராட்வே பகுதியில் பிரகாசம் சாலையில் லாரிகளை இருபுறமும் இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தி சாலையை ஆக்கிரமித்து விடுகிறார்கள். இதனால், இரவு நேரத்தில் வேலை முடிந்து திரும்புவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அங்குள்ள மினர்வா பேருந்து நிலையம் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. எனவே, லாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வடிவேல், பிராட்வே.