நங்கநல்லூரில் இருந்து தாம்பரம், விமான நிலையம் உள்பட மாநகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் முதல் பிரதான சாலையையே பயன்படுத்துகின்றனர். இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, முதல் பிரதான சாலையை ஒருவழிப்பாதையாக அறிவிக்க வேண்டும். மேலும், முதல் பிரதான சாலையில் இருந்து பக்கவாட்டில் பிரியும் 24-ஆவது தெருவுக்கு வேகத்தடை அமைப்பது அவசியமாகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணமாச்சாரி,
நங்கநல்லூர்.