சென்னை மண்ணடி பகுதியில் பெரும்பாலான கடைகளில் இருந்து இரும்புக் கம்பிகள், ராடுகள், தகடுகளை மீன்பாடி வண்டிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இங்குள்ள குறுகிய சாலைகளில் இந்த மீன்பாடி வண்டிகள் செல்வதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரும்புக் கம்பிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.ஆறுமுகம், சென்னை-1.