சென்னை புறவழிச்சாலையானது தாம்பரம் இரும்புலியூரில் ஆரம்பித்து வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், கோவூர், போரூர், மதுரவாயல், நொளம்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், சூரப்பட்டு வழியாக புழல் சென்றடைகிறது. தற்போது இந்தப் புறவழிச் சாலை வழியாக, புதிய தடம் எண் 104 (செங்குன்றம்-தாம்பரம்) மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் புறவழிச் சாலை வழியாக ஆவடியிலிருந்து அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் வழியாக தாம்பரம் வரை புதிய வழித்தடத்தையும் இயக்கினால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.எஸ்.கணபதி சுப்பிரமணியன், தாம்பரம்.