உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மருத்துவமனை இல்லாததால் 30 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனா். பொதுமக்களின் நலன் கருதி உத்தரமேரூரில் அரசு மருத்துவமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அபிராமி, உத்தரமேரூா்.