வேளச்சேரி அஞ்சல் நிலையத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு செல்ல குறுகலான பாதையுடன் கூடிய படிகளில் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. அஞ்சல் நிலையத்திற்குள் போதிய இடவசதி இல்லை. உட்காரவும் நாற்காலிகள் இல்லை. கூட்டத்திற்கு ஏற்ற கவுன்ட்டர்கள் செயல்படவில்லை. இந்தக் குறைகளைக் களைய அஞ்சல் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
கே.சுந்தரேசன், வேளச்சேரி.