சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல ஆலந்தூர் திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெரு வழியாகச் செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒரு கி.மீ. தொலைவுக்குச் சுற்றி வாகனங்களை எடுத்து வர வேண்டியுள்ளது. பயணிகள் நலன் கருதி அந்த நுழைவு வாயிலை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பி.ரமேஷ், உள்ளகரம்.