ஆவடியில் இருந்து கொரட்டூர், அண்ணாநகர் மேற்கு, சேத்துப்பட்டு, ஜெமினி வழியாக மந்தைவெளி வரை இயக்கப்பட்டு வந்த எட்டு மாநகரப் பேருந்துகள் தடம் எண் 41டி, தற்போது அம்பத்தூர் ஓ.டி.யில் இருந்து இயக்கப்படுகின்றன. இதேபோன்று ஆவடியில் இருந்து ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை வழியாக விவேகானந்தர் இல்லம் வரை சென்று வந்த 24சி தடம் எண் பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து பம்மல், குன்றத்தூர், மாங்காடு வழியாக ஆவடி வரை இயக்கப்பட்ட தடம் எண் 266 பேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீண்டும் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.சிவகுருநாதன், ஆவடி.