தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், அடையாள அட்டை பெறுவதற்காக சென்னை சோழிங்கநல்லூர் இ-சேவை மையத்துக்குச் சென்றால், அட்டை கைவசம் இல்லை எனவும், 20 நாள்கள் கழித்து வரும்படியும் சொல்கின்றனர். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நேரத்தில் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.எம்.பழனிசாமி, போலச்சேரி.