சென்னை-1, தாதா முத்தியப்பன் தெரு-ஆச்சாரப்பன் தெரு சந்திப்பில் மாநகராட்சி கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்த தபால் பெட்டி அகற்றப்பட்டு ஒரு மாதமாகிறது. அந்த இடத்தில் புதிய தபால் பெட்டி வைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் புதிய தபால் பெட்டி வைக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ஆர்.ரவீந்திரன், சென்னை-1.