சென்னை, பேசின் பிரிட்ஜ் வழியாகச் செல்லும் வாகனங்களால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் 159, 159ஏ, 159பி, 37ஜி, 59 ஆகிய பேருந்துகள் இப் பகுதி வழியாக புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றன. இதனால் வாகனங்கள் நகருவதற்கு ஒன்றரை மணிநேரமாகிறது. மேலும், அந்தச் சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே, பழுதடைந்த சாலையைச் செப்பனிடவும், அந்த வழியில் மேம்பாலம் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.கே.ஈஸ்வரன், சென்னை.