சென்னை மாநகராட்சி 1, 2-ஆவது வார்டுகளுக்கு உள்பட்ட கத்திவாக்கம், எண்ணூர் பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட உள்புறச் சாலைகள் பணி முடிந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல், இன்னும் மண்சாலையாகவே உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதனைச் சீரமைத்து, தார்ச்சாலையாக்க வேண்டும்.
- கு.காந்திராஜா, எண்ணூர்.