கோடம்பாக்கம் மைனர் டிரஸ்ட்புரம், முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீடுகளுக்கு பல மாதங்களாக மெட்ரோ குடிநீர் வருவதே இல்லை. லாரி நீரை வாங்கித்தான் இப்பகுதி மக்கள் சமாளிக்கின்றனர். மேலும், பல வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மெட்ரோ குடிநீர் வருவதில்லை. இப்பிரச்னையை தீர்க்க குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை தேவை.
- பா.லதா ரங்கன், கோடம்பாக்கம்.