தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானபயணிகள் வருகின்றனர். இங்குள்ள முதல் நடைமேடை பராமரிப்பின்றி மேடும், பள்ளமுமாக உள்ளது. பயணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நடைமேடைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், டிக்கெட் கவுன்ட்டர் முதல் நடைமேடையில் உள்ளதால், பயணிகள் பயணச்சீட்டு வாங்கவும், ரயில்களைப் பிடிக்கவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. எனவே, டிக்கெட் கவுன்ட்டரை இரண்டாம் நடைமேடைக்கு மாற்றுவதுடன், முதல் நடைமேடையைச் சீரமைக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- கே.எஸ்.வெங்கடேசன்,
புதுபெருங்களத்தூர்.