பெருநகர சென்னை மாநகராட்சி 180-ஆவது வார்டு, தரமணி ராஜாஜி தெருவில் உள்ள வீடுகளுக்கு இணைப்புப் பெற்றுள்ள குடிநீர்க் குழாய்களில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து, உதவி செயற்பொறியாளரிடம் முறையிட்டும் பயனில்லை. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் தெருவில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.ராமமூர்த்தி, தரமணி.