ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் லாசர் நகர் 2-ஆவது குறுக்குச் சாலையில், பாரதி பள்ளிக்கு அருகிலும், அங்காள பரமேஸ்வரி கோயில் அருகிலும் குப்பைகள் குவிந்து சாலையைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதோடு, துர்நாற்றத்தால் இப்பகுதி மக்கள் வீட்டைப் பூட்டிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற ஆவடி பெருநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் தூக்கியெறியாமல் குப்பைத் தொட்டியில் சேமிக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
பி.சோமசுந்தரம், ஆவடி.