சென்னை திரு.வி.க.நகரைச் சுற்றி உருவாகி வரும் பல நகர்களால் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அஞ்சலக வசதி இல்லை. பெரியார் நகர் அல்லது குமரன் நகர் அஞ்சலகங்களுக்குத் தான் மக்கள் செல்ல வேண்டும். குமரன் நகர் அஞ்சலகத்தில் ஒரு கவுன்ட்டர் மட்டுமே இயங்குவதால், தபால் பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே, அஞ்சலகத்தில் கூடுதலாக ஒரு கவுன்ட்டர் திறந்து, அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க சென்னை தலைமை அஞ்சல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.