அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் இருந்து பிராட்வே வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகரப் பேருந்து, சீரான முறையில் இயங்குவது இல்லை. வந்தால் மொத்தமாக நான்கு பேருந்துகள் அடுத்தடுத்து வருவதும் இல்லையென்றால் பேருந்துக்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, எம்.எம்.டி.ஏ. பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளரை நியமித்து, பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எம்.எம்.டி.ஏ. காலனிக்கு சில ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட 15 ஹெச் தடம் எண் பேருந்து தற்போது இயக்கப்படுவதில்லை. அதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.சிவநேசன், அமைந்தகரை.