சென்னை ஆவடி பெருநகராட்சி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 2-ஆவது செக்டார், மசூதி தெருவில் ராயல் போர்வெல் அருகிலுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து, கம்பத்திலுள்ள இரும்புக் கம்பிகள் தெரிகின்றன. கோடை மழை பெய்தாலோ, வேகமாகக் காற்று வீசினாலோ எந்த நேரத்திலும் முறிந்து விடும் ஆபத்து உள்ளது. மேலும், இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, இந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, ஆவடி.