பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4, வட்டம் 34-க்கு உள்பட்ட கடும்பாடி அம்மன் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால், தோண்டப்பட்ட சாலை இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. மேலும், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்களும், கடைகளும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையைச் செப்பனிட பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சங்கரலிங்கம், சின்ன சேக்காடு.