சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூவில் ஒரு அபார்ட்மெண்ட் அருகில் ஒரு மரத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த தபால் பெட்டியை தற்போது எடுத்துவிட்டார்கள். இதனால், தபால்களைப் போடுவதற்கு வண்ணான்துறை அல்லது இந்திரா நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், முதியோர், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மீண்டும் அதே இடத்தில் தபால் பெட்டியை வைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு,
திருவான்மியூர்.