சென்னை உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பெருநகர மாநகராட்சியின் குப்பை லாரிகள் அனைத்தும் புழுதிவாக்கம் பிரதான சாலையிலேயே இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.நல்லசிவம், உள்ளகரம்.