பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வட்டம் 41-க்குள்பட்ட தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தில் இருந்து எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் எச்.6 ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலையத்தில் இருந்து கொடுங்கையூர்-எழில்நகர் வரை உள்ள மணலி நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையை அப்பகுதி கடைக்காரர்களும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மாணவ, மாணவியர், பொதுமக்கள் நடைபாதையில் செல்ல முடியாமல் சாலையில் நடப்பதால் அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கின்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சின்ன சேக்காடு.