சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை மருந்தீஸ்வரர் நகர் அருகே பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளத்தை மூடுவதற்கு பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.