திருவொற்றியூரில் இருந்து வேளாங்கனிக்குச் செல்லும் அரசுப் பேருந்து, இரவு 8.15 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. ஆனால், இதற்கான டிக்கெட்டுகள் பழைய பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், முன்பதிவு மையத்தில் பேருந்து புறப்படும் நேரம் குறித்து சரியான அறிவிப்புப் பலகை வைக்கப்படாததால் பேருந்தைப் பிடிக்க முதியோர், நோயாளிகள் அலைய வேண்டியுள்ளது. அதேபோல, ரயில்களில் முதியோருக்கு பயணச் சலுகை வழங்கப்படுவதைப் போல, அரசு விரைவுப் பேருந்துகளிலும் வழங்கினால் உதவியாக இருக்கும்.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.