பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-3, வட்டம்-29 -க்கு உள்பட்ட அவுரி கொல்லைமேடு பகுதியில் உள்ள முனுசாமி தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 2016 -ஆம் ஆண்டில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், தெரு முழுவதும் மேடு, பள்ளங்களுடன் தூசி மண்டலமாகக் காட்சியளிக்கிறது. முனுசாமி தெருவை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கனிஷ்கர், பல்ஜிபாளையம்.