சென்னை பெரு மாநகராட்சி 10-ஆவது மண்டலம், 137-வது வார்டு, 61-ஆவது தெருவில் மாநகராட்சி சார்பில் சிறுவர்கள் விளையாட்டுத் திடல் ஏற்படுத்தப்பட்டது. பக்கத்தில் பூங்கா அமைக்கப்படவில்லை. பூங்காவுக்கான காலி மைதானத்தில் விடுமுறை நாள்களில் அதிகாலையே பிற பகுதி இளைஞர்கள் விளையாட கூடி விடுகின்றனர். அவர்கள் போடும் கூச்சலில் பக்கத்து குடியிருப்பு வாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த காலி மைதானத்தில் பெயர் பலகை வைத்து, பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.எம்.சுவாமி, கே.கே.நகர்.