நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையிலிருந்து பக்கவாட்டில் பிரிந்து செல்லும் 24-ஆவது தெரு சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்தால் பாதசாரிகள் முதலாவது பிரதான சாலையைக் கடந்து செல்ல முடியும். மேலும், வளைவில் திரும்பிச்செல்லும் வாகனங்கள் இந்த வேகத்தடையால் குறைவான வேகத்தில் விபத்தில் சிக்காமல் செல்ல உதவும். 24 -ஆவது, 23 -வது தெருக்களின் எதிர் பகுதியில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலையை விபத்தில்லாததாக மாற்ற வேண்டும்.
- டி.வி. கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.